Saturday, July 3, 2010

சிந்திக்க......

வேலூரில் தி.மு.க கவுன்சிலர் ஒருவர் முதல்வருக்கு கோவில் கட்டி உள்ளார்...உசுரோட உள்ள ஒருவருக்கு கோவில் கட்டி கும்பிடற மட சாம்பிராணிகள் நம்ம ஊரில் தான் இருக்கிறார்கள்..முன்னர் குஷ்புவுக்கு கட்டினார்கள், இப்போ கவுன்சிலர் ஒருத்தரே, கடவுள் நம்பிக்கை சிறிதும் இல்லாத முதல்வர் அவர்களுக்கு கோவில் கட்டி உள்ளார்...அவர் எதை எதிர்பார்த்து கட்டினார் என்பது அவருக்கே வெளிச்சம்...(கோவிலை அப்புறபடுத்தி விட்டார்கள் என்பது வேற விஷயம்)

ஆரவாரமா கட்சியில சேர்ந்த குஷ்பூ சத்தமே இல்லாமல் அமைதி ஆகி விட்டார்...எதிர்பார்த்த முக்கியத்துவம் கிடைக்கவில்லை, வர போகிற மேலவையிலும் இடம் கிடைப்பதற்கான அறிகுறி இல்லை...மூத்த அமைச்சர்கள் , மகள் எதிர்ப்பலைகளால் குஷ்புவை பிரசார பீரங்கியாக மட்டும் உபயோகப்படுத்தி கொள்ளலாம் என்று தலைவர் எண்ணி விட்டார் போலும்...

பெண் போலீஸ் ஒருவரை திருமணம் செய்து கொண்ட ராணுவ வீரர் ஒருவர் இன்னொரு திருமணம் செய்யவிருந்த நிலையில் பெண் போலீஸ் தர்ணா செய்து திருமணத்தை தடுத்து நிறுத்தி உள்ளார்..பெண் போலீஸ் ஆகிய அவருக்கே இந்த நிலை என்றால் சாதாரண பெண்ணிற்கு என்ன நிலை???

தமிழ் ஈழம், விடுதலை புலிகள் என்று இங்கு உள்ள அரசியல் தலைவர்கள் அரசியல் நடத்தி கொண்டு இருந்தார்கள்...போர் முடிவுக்கு வந்த பின் அங்கு இருக்கும் தமிழ் ஈழ மக்களை பற்றி யாரும் இங்கு கவலை பட காணோம்...அவர்கள் துயர் துடைக்க ஒரு முயற்சியும் எடுக்க காணோம்....