Sunday, May 9, 2010

இன்னும் என்ன கொடுமை எல்லாம் இருக்குதோ!!!

தமிழக மக்களுக்கு சோதனை மேல சோதனை..காலாவதி மருந்து பிரச்சனையே இன்னும் ஓய வில்லை அதுக்குள்ளே தரமற்ற உணவை சாப்பிட்டதால் மதுரையில் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்து உள்ளார்....அதுவும் நல்ல பெரிய ஓட்டல், மதுரை ரயில் நிலையம் எதிரே உள்ளது...நூற்றுக்கணக்கான மக்கள் தினமும் வந்து உண்டு செல்லும் இடம் அது....ஒரு உயிர் பலி நடந்த பிறகுதான் அந்த ஓட்டலை மூடி, மற்ற ஓட்டல்களிலும் சோதனை மேற்கொள்கிறார்கள் சுகாதார துறை அதிகாரிகள்...

காலாவதி மருந்து விசயத்திலும் ஒரு உயிர் போகும் வரை காத்திருந்து அதன் பின்னரே களத்தில் இறங்கினார்கள்...இப்போது பண்ணும் சோதனை மத்த இத்யாதிகளை முன்னரே பண்ணி இருந்தால் சில உயிர்கள் காப்பாற்ற பட்டு இருக்கும்..ஏன் இந்த கண்டும் கண்காணாத நிலை???இப்போது கைது செய்யப்பட்டு இருப்பவர் இன்னும் கொஞ்ச நாளில் மறுபடி அதே இடத்தில ஓட்டல் ஆரம்பித்து விடுவார்..நம்ம சட்ட திட்டங்கள்...அதன் ஓட்டைகள் அப்படித்தானே இருக்கிறது...

சென்னையில் நடத்திய சோதனையில் நல்ல பெரிய பல்பொருள் அங்காடிகளில் கூட காலாவதியான குளிர்பானங்கள், நூடுல்ஸ், இடியாப்ப மாவு, போன்றவற்றை கைப்பற்றி உள்ளார்கள்..மேலும் இந்த மாதிரி பொருட்களை மொத்தமாக வாங்கி பாதி விலைக்கு விற்கும் கும்பலையும் பிடித்துள்ளார்கள்...இன்னும் என்னன்னா பூதங்கள் கிளம்ப போகிறது என தெரியவில்லை...உயிர் பலி ஆகும் வரை காத்திராமல் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அடிக்கடி ஆய்வுக்கு சென்று தரமில்லாத எந்த ஒரு ஓட்டல், பள்ளிகள், கல்லூரிகள், சினிமா அரங்கம், மால்கள், ரோட்டோர கடைகள், மருந்து கடைகள், மருத்துவர்கள், இப்படியாக எதையும் நடத்த அனுமதிக்க கூடாது...கேவலம் லஞ்ச பணத்துக்காக அனுமதி அளித்து பொது மக்கள் உயிரோடு விளையாட கூடாது...

நாமளும் நம்மை ஆளும் அரசை, அதிகாரிகளை நம்பாமல் எந்த ஒரு பொருளை வாங்கினாலும் அது தரமானதா என்று பார்த்து வாங்க வேண்டும்...காசு கம்மியாக கிடைக்கிறது என்று காண்பதை வாங்கி அவஸ்தை பட கூடாது...

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.