Monday, November 23, 2009

நாம் இந்தியர்.....

நாம் இந்தியர் என்பதை, நாம் 'இந்தி' யர்னு மாற்றிடுவாங்க போல...நான் எத பத்தி சொல்ல வர்ரேன் னு உங்களுக்கு புரிஞ்சிருக்கும்....

"மும்பை அனைவருக்கும் சொந்தமானது'என, கூறியதற்காக இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ் மேன் சச்சினை சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே கடுமையாக விமர்சனம் செய்திருக்கார்....என்ன கொடுமை சார் இது?? இதை கேட்க நாதியே இல்லையா இங்க??

இப்படியே எல்லாரும் மாநிலம் வாரியாக சொந்தம் கொண்டாட ஆரம்பிச்சா அப்புறம் இந்தியாகுள்ளயே நாம ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலம் போக விசா எடுக்க வேண்டி வரும் போல..பால் தாக்கரே யாரு??? இந்தியா சுதந்திரம் வாங்க பாடு பட்டாரா, இல்ல எல்லை கோட்டுல நின்னு துப்பாக்கி பிடிச்சு காவல் காத்தார?

மும்பையை சொந்தம் கொண்டாடும் தாக்கரே , எல்லை தாண்டி பயங்கரவாதம் செய்யும் பாகிஸ்தான், சீனா ராணுவ வீரர்களை தம் தொண்டர்களுடன் போய் எதிர் கொள்ள தயாரா?? சும்மா ஓட்டுக்காக மக்களை பிரிக்கும் இந்த மாதிரி வேலை யை விட்டு விட்டு வீட்டில் பேரன் பேத்திகளோடு அவர் விளையாடலாம்.....

சச்சின் மட்டுமல்லாமல் அனைத்து புகழ் பெற்ற பிரபலங்களும் தாக்கரே கருத்துக்கு எதிராக தங்களது கருத்தை பதிவு செய்ய வேண்டும்...

சிவசேனா கட்சி இந்தியாவிற்காக என்ன செய்தது?மும்பையை பாகிஸ்தான் தீவரவாதிகள் தாக்கும் பொழுது எங்கே சென்றார் இந்த தாக்கரே ?? மராத்தியர் நாங்களே விரட்டுவோம் என்று விரட்ட வேண்டியதுதானே?? இயற்கை அழிவுகள் வந்தால் மத்திய அரசுவிடமிருந்து உதவிகள் வேண்டும். அந்த நேரத்தில் நாங்களே பர்ர்த்து கொள்கிறோம் என்று சொல்ல நாதி இல்லை. .

இந்தியாவை பிளவுபடுத்தும் இது போன்ற எண்ணங்கள் உள்ள கட்சிகளை தடை செய்ய வேண்டும் .. இந்த மாதிரியான கட்சிகள் இருப்பதால்தான் நம் நாடு இன்னும் முன்னேற முடியாமல் தவிக்கிறது . மக்கள் அனைவரும் ஒன்று பட வேண்டும் ....

மும்பையில் வேலை பார்க்கும் பிற மாநிலத்தவரை அடித்து துரத்தும் முன் தாக்கரே ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும்...பிற மாநிலங்களில் மராட்டியர்களும் உண்டு என்பதை....அவர்களும் தாக்கரே போல் பிரிவினை நோய் தாக்கி மராத்தியர்களை விரட்ட நினைத்தால்???

மொழி வெறி ,இன வெறி, ஜாதி வெறி இல்லாத இந்தியாவை காண்பது எப்போது???????பதில் தெரிந்தால் எழுதுங்கள் எனக்கு....

4 comments:

  1. ippo irukkara ulagam azhinju aduthathaa puthu ulagam aaramikkumpothuthan apdi oru india va paakkalam :)

    ReplyDelete
  2. ettippaaka sonninga en blog vandhu


    paarthutten!

    ReplyDelete
  3. @ Kiruthiga...appadiyae vanthalum, athaiyum namma arasiyalvathigal azhiththu viduvargal...

    ReplyDelete
  4. @ஷைலஜா--> paarthathukku nanri..adikkadi vanga....

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.