Sunday, December 20, 2009

தெலுங்கானா..தெலுங்கானா.....

கொஞ்ச நாட்களாக எல்லா செய்தி தாள்களிலும், சேனல்களிலும் , வலைத்தளங்களிலும் நாம் படித்து கொண்டிருப்பது, பார்த்து கொண்டிருப்பது இந்த தெலுங்கானா சமாச்சாரம் தான் .....எப்ப இருந்தோ புகஞ்சிட்டு இருந்தது இப்ப நல்ல கொழுந்து விட்டு எரியுது....யாரெல்லாம் முன்னர் ஆதரவு கொடுத்தாங்களோ அவங்கல்லாம் இப்போ எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பிச்சு இருக்காங்க....ஹ்ம்ம் எல்லாம் அரசியல் ஆதாயத்துக்காக....

ராவ் என்னவோ நினச்சு உண்ணாவிரதம் இருக்க போக, அவரை உசுப்பேத்தி சாகும் வரைக்குமான உண்ணாவிரதமாக மாற்றி, மத்திய அரசை பயமுறுத்தி அறிவிப்பு விடற வரைக்குமாக போயாச்சு....இதைத்தான் பிள்ளையார் பிடிக்க குரங்காய் போச்சுன்னு பெரியவங்க சொல்லி வச்சாங்களோ....எந்த நேரத்துல மத்திய அரசு அறிவிச்சதோ , இப்போ அதற்கு எதிர்ப்பு அலையும் பயங்கரமா இருக்கு , மற்ற மாநிலங்களையும் பிரிக்கணும் என்கிற கோஷங்களும் அதிகரிச்சு இருக்கு....

தனி தெலுங்கானா கேட்பதிலையும் ஒரு நியாயம் இருக்கிறது....பல ஆண்டுகளாகவே எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் புறக்கணிக்க படுவதாலயே தனி தெலுங்கானா ஒன்றே ஒரே தீர்வு என அம்மக்கள் நினைக்கிறார்கள்....இது மத்திய அரசின் தவறே அன்றி அம்மக்களோடது அல்ல...

அவசரம் அவசரமாக அறிவிப்பு வெளியிடாமல் மெதுவாக ஆக வேண்டிய காரியங்களை செய்திருந்தால், இத்தகைய போராட்டங்களை சந்திக்கa வேண்டி இருந்திருக்காது....

சரி இதை விடுங்க...நம்ம தமிழ் நாட்டை பிரிப்பதற்காக எழும் கோஷங்களை பற்றி என்ன நினைக்கிறேர்கள்? தமிழ் நாட்டை பிரிப்பது நன்மை பயக்குமா அல்லது அவ்வாறு எண்ணுவதே தவறாகுமா?????

1 comment:

  1. thamil naatai pirithal angu pirithadhu poal illamal katchi maargamagathan pirikka vaendi irukkum.. ungalukku purindhirukkum yendru nambugiraen... angavadhu minorityaga irundhalum adhai patri paesuvadhu kammiyaga irundhadhu... aanal ingo minority yendrudhan moochukku munnooru dhadavai paesugirargal... yenna seivadhu? Tamilnadu appadi pirivadhatkul,ulagil yedhaenum adhisayam nadandhal nandraga irukkum...

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.