காங்கிரசில் சேர போகிறார்,அதிமுக வில் சேர போகிறார் என்று பரபரப்புகளுக்கிடயே இறுதியாக திமுகவில் கலைஞர், ஸ்டாலின் முன் சேர்ந்துள்ளார் நம்ம குஷ்பூ...விரைவில் ஒரு கவர்ச்சிகர சட்டமன்ற உறுப்பினரையோ, நாடாளுமன்ற உறுப்பினரையோ, வரப்போகும் மேலவை உறுப்பினரையோ அல்லது ஒரு அமைச்சரையோ பார்க்கலாம்..கட்சியில் உறுப்பினராக எந்த ஒரு தகுதியும் தேவையில்லை தான்...ஆனால் பதவியில் அமர எந்த தகுதி அடிப்படையில் தேர்ந்து எடுக்க படுகிறார்கள் என்பதை நம்ம கலைஞர் தான் சொல்ல வேண்டும்...
பாமர, படித்த மக்களுக்குத்தான் இந்த சினிமா மோகம் என்றால், தேர்ந்த அரசியல்வாதிகளுக்கு கூட ஏன் இந்த சினிமா மோகம் என்று தெரியவில்லை....நடிகர்கள், நடிகைகளை கட்சியில் சேர்ப்பதிலும் அவர்களை அமைச்சராக்கி அழகு பார்ப்பதிலும் பெருமகிழ்ச்சி கொள்கின்றனர்..ஏற்கனவே சினிமா துறை கலைஞர்களுக்காக வீடு கட்ட ஏக்கர் கணக்கில் இடம் கொடுத்து அதுக்காக பாராட்டு விழாவும் பெற்று கொண்டார்..யார் அப்பன் வீட்டு சொத்தை யார், யாருக்காக கொடுப்பது???கோடிக்கணக்கான பணம் பழகும் இடம் சினிமா துறை...கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள் , தயாரிப்பாளர்கள் இப்படியாக இவர்கள் ஆளுக்கு ஒரு கோடி கொடுத்தால் சினிமா துறையில் உள்ள அடிமட்ட தொழிலாளர்களுக்கு வீடு மற்ற வசதிகள் தானாக கிடைத்து விடும்...
அதை விட்டு விட்டு நாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தில் வரியை பிடித்து அதை இந்த மாதிரி வாரி வழங்கி கொண்டு இருக்கிறார்....இதே போல் அனைத்து துறையினருக்கும் வீடு கட்டி கொடுப்பாரா?இப்போ குஷ்பூ, இனி மும்தாஜ், கும்தாஜ், சோனா, ஏன் ஷகிலா என்று எல்லாரையும் சேர்த்துகிட்டு அமைச்சரவையிலும் இடம் கொடுத்து சாதனை புரிவார்....நாம பார்த்து சந்தோஷ பட்டுடு இருக்க வேண்டிதான்....
Friday, May 14, 2010
Sunday, May 9, 2010
இன்னும் என்ன கொடுமை எல்லாம் இருக்குதோ!!!
தமிழக மக்களுக்கு சோதனை மேல சோதனை..காலாவதி மருந்து பிரச்சனையே இன்னும் ஓய வில்லை அதுக்குள்ளே தரமற்ற உணவை சாப்பிட்டதால் மதுரையில் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்து உள்ளார்....அதுவும் நல்ல பெரிய ஓட்டல், மதுரை ரயில் நிலையம் எதிரே உள்ளது...நூற்றுக்கணக்கான மக்கள் தினமும் வந்து உண்டு செல்லும் இடம் அது....ஒரு உயிர் பலி நடந்த பிறகுதான் அந்த ஓட்டலை மூடி, மற்ற ஓட்டல்களிலும் சோதனை மேற்கொள்கிறார்கள் சுகாதார துறை அதிகாரிகள்...
காலாவதி மருந்து விசயத்திலும் ஒரு உயிர் போகும் வரை காத்திருந்து அதன் பின்னரே களத்தில் இறங்கினார்கள்...இப்போது பண்ணும் சோதனை மத்த இத்யாதிகளை முன்னரே பண்ணி இருந்தால் சில உயிர்கள் காப்பாற்ற பட்டு இருக்கும்..ஏன் இந்த கண்டும் கண்காணாத நிலை???இப்போது கைது செய்யப்பட்டு இருப்பவர் இன்னும் கொஞ்ச நாளில் மறுபடி அதே இடத்தில ஓட்டல் ஆரம்பித்து விடுவார்..நம்ம சட்ட திட்டங்கள்...அதன் ஓட்டைகள் அப்படித்தானே இருக்கிறது...
சென்னையில் நடத்திய சோதனையில் நல்ல பெரிய பல்பொருள் அங்காடிகளில் கூட காலாவதியான குளிர்பானங்கள், நூடுல்ஸ், இடியாப்ப மாவு, போன்றவற்றை கைப்பற்றி உள்ளார்கள்..மேலும் இந்த மாதிரி பொருட்களை மொத்தமாக வாங்கி பாதி விலைக்கு விற்கும் கும்பலையும் பிடித்துள்ளார்கள்...இன்னும் என்னன்னா பூதங்கள் கிளம்ப போகிறது என தெரியவில்லை...உயிர் பலி ஆகும் வரை காத்திராமல் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அடிக்கடி ஆய்வுக்கு சென்று தரமில்லாத எந்த ஒரு ஓட்டல், பள்ளிகள், கல்லூரிகள், சினிமா அரங்கம், மால்கள், ரோட்டோர கடைகள், மருந்து கடைகள், மருத்துவர்கள், இப்படியாக எதையும் நடத்த அனுமதிக்க கூடாது...கேவலம் லஞ்ச பணத்துக்காக அனுமதி அளித்து பொது மக்கள் உயிரோடு விளையாட கூடாது...
நாமளும் நம்மை ஆளும் அரசை, அதிகாரிகளை நம்பாமல் எந்த ஒரு பொருளை வாங்கினாலும் அது தரமானதா என்று பார்த்து வாங்க வேண்டும்...காசு கம்மியாக கிடைக்கிறது என்று காண்பதை வாங்கி அவஸ்தை பட கூடாது...
காலாவதி மருந்து விசயத்திலும் ஒரு உயிர் போகும் வரை காத்திருந்து அதன் பின்னரே களத்தில் இறங்கினார்கள்...இப்போது பண்ணும் சோதனை மத்த இத்யாதிகளை முன்னரே பண்ணி இருந்தால் சில உயிர்கள் காப்பாற்ற பட்டு இருக்கும்..ஏன் இந்த கண்டும் கண்காணாத நிலை???இப்போது கைது செய்யப்பட்டு இருப்பவர் இன்னும் கொஞ்ச நாளில் மறுபடி அதே இடத்தில ஓட்டல் ஆரம்பித்து விடுவார்..நம்ம சட்ட திட்டங்கள்...அதன் ஓட்டைகள் அப்படித்தானே இருக்கிறது...
சென்னையில் நடத்திய சோதனையில் நல்ல பெரிய பல்பொருள் அங்காடிகளில் கூட காலாவதியான குளிர்பானங்கள், நூடுல்ஸ், இடியாப்ப மாவு, போன்றவற்றை கைப்பற்றி உள்ளார்கள்..மேலும் இந்த மாதிரி பொருட்களை மொத்தமாக வாங்கி பாதி விலைக்கு விற்கும் கும்பலையும் பிடித்துள்ளார்கள்...இன்னும் என்னன்னா பூதங்கள் கிளம்ப போகிறது என தெரியவில்லை...உயிர் பலி ஆகும் வரை காத்திராமல் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அடிக்கடி ஆய்வுக்கு சென்று தரமில்லாத எந்த ஒரு ஓட்டல், பள்ளிகள், கல்லூரிகள், சினிமா அரங்கம், மால்கள், ரோட்டோர கடைகள், மருந்து கடைகள், மருத்துவர்கள், இப்படியாக எதையும் நடத்த அனுமதிக்க கூடாது...கேவலம் லஞ்ச பணத்துக்காக அனுமதி அளித்து பொது மக்கள் உயிரோடு விளையாட கூடாது...
நாமளும் நம்மை ஆளும் அரசை, அதிகாரிகளை நம்பாமல் எந்த ஒரு பொருளை வாங்கினாலும் அது தரமானதா என்று பார்த்து வாங்க வேண்டும்...காசு கம்மியாக கிடைக்கிறது என்று காண்பதை வாங்கி அவஸ்தை பட கூடாது...
Saturday, January 2, 2010
சட்டம் ஒரு இருட்டறை...
சட்டம் ஒரு இருட்டறை என்பது நம்ம நாட்டுக்கு நன்றாக பொருந்தும்....எங்கு குற்றங்கள் ரொம்ப மலிவாக நடக்கிறது என்று பார்த்தால் அதில் நாம முதல் பத்து இடங்களுக்குள்ள இருப்போம் என்று நினைகிறேன்...(புள்ளி விவரம் தெரியவில்லை) ..மலிவாக நடப்பதற்கு காரணம் என்ன என்று பார்த்தால் சட்டங்கள் இங்கு கடுமையாக இல்லை...கொலை, கொள்ளை, கற்பழிப்பு செய்தால் வெகு சீக்கிரமாக வெளியே வர மாதிரிதான் நம்ம சட்டங்களும் இருக்கு, அதுக்கு அளிக்கபடுற தண்டனைகளும் இருக்கிறது...பச்சிளம் குழந்தையை கொலை செய்தால் கூட அவர்களுக்கு கடும் தண்டனை கிடைப்பதில்லை...
சந்தேகம் காரணமாகவும், கள்ளக்காதலுக்கு இடைஞ்சல் என்றும், குழந்தைகள் கொலை செய்ய படுவதை நாம் ஊடகங்கள் மூலமாக தினமும் படித்து கொண்டும், பார்த்து கொண்டும், கேட்டு கொண்டும் இருக்கிறோம்...ஆனால் அதற்காக அளிக்கப்படும் தண்டனையோ மிக குறைவு....இது மற்றவர்களை ஊக்குவிக்குமே தவிர தவறு செய்ய அஞ்ச வைக்காது....நம் நாட்டில் தான் தினமும் எத்தனை கொலைகள், கொள்ளைகள், கற்பழிப்புகள்..எப்பவோ நம் முன்னோர்கள் வகுத்து வைத்த சட்டங்களை இப்பவும் அப்படியே கடை பிடிப்பது வளர்ந்து வரும் நமது சமுதாயத்துக்கு நல்லது அல்ல....
இப்போது உள்ள காலத்திற்கு ஏற்ப சட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும்...சட்டங்களை கடுமையானதாக மற்ற வேண்டும்...கொலை செய்தால் மரண தண்டனை...அதுவும் பொது மக்கள் முன்னிலையில்..குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தால், பொது இடத்தில் வைத்து அணு அணுவாக சித்ரவதை செய்து மரண தண்டனை, கற்பழித்தால் ஆணுறுப்பை துண்டிப்பது...இது எதுவுமே புதுசு அல்ல..அரேபியா நாடுகளில் நடக்கும் ஒன்றுதான்...
நம் நாட்டில் தான் கொலை, கற்பழிப்பு வழக்குகளில் சிக்கியுள்ளவர்கள் அரசியலில் ஈடுபட்டு உயர் பொறுப்பு வகிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன....இதையெல்லாம் மாற்றினாலே பாதி குற்றங்கள் குறைந்து விடும்....முதலமைச்சர், ஆளுநர், போலீஸ் அதிகாரி என உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள் தவறு செய்தால் அதற்கு தண்டனை கிடைத்தால் அது மிக ஆச்சரியம்...அப்படியே கிடைத்தாலும் அது மிக மிக குறைந்த தண்டனையே....நமது நாட்டில் சட்டம் ஒரு இருட்டறைதான் ...
சந்தேகம் காரணமாகவும், கள்ளக்காதலுக்கு இடைஞ்சல் என்றும், குழந்தைகள் கொலை செய்ய படுவதை நாம் ஊடகங்கள் மூலமாக தினமும் படித்து கொண்டும், பார்த்து கொண்டும், கேட்டு கொண்டும் இருக்கிறோம்...ஆனால் அதற்காக அளிக்கப்படும் தண்டனையோ மிக குறைவு....இது மற்றவர்களை ஊக்குவிக்குமே தவிர தவறு செய்ய அஞ்ச வைக்காது....நம் நாட்டில் தான் தினமும் எத்தனை கொலைகள், கொள்ளைகள், கற்பழிப்புகள்..எப்பவோ நம் முன்னோர்கள் வகுத்து வைத்த சட்டங்களை இப்பவும் அப்படியே கடை பிடிப்பது வளர்ந்து வரும் நமது சமுதாயத்துக்கு நல்லது அல்ல....
இப்போது உள்ள காலத்திற்கு ஏற்ப சட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும்...சட்டங்களை கடுமையானதாக மற்ற வேண்டும்...கொலை செய்தால் மரண தண்டனை...அதுவும் பொது மக்கள் முன்னிலையில்..குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தால், பொது இடத்தில் வைத்து அணு அணுவாக சித்ரவதை செய்து மரண தண்டனை, கற்பழித்தால் ஆணுறுப்பை துண்டிப்பது...இது எதுவுமே புதுசு அல்ல..அரேபியா நாடுகளில் நடக்கும் ஒன்றுதான்...
நம் நாட்டில் தான் கொலை, கற்பழிப்பு வழக்குகளில் சிக்கியுள்ளவர்கள் அரசியலில் ஈடுபட்டு உயர் பொறுப்பு வகிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன....இதையெல்லாம் மாற்றினாலே பாதி குற்றங்கள் குறைந்து விடும்....முதலமைச்சர், ஆளுநர், போலீஸ் அதிகாரி என உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள் தவறு செய்தால் அதற்கு தண்டனை கிடைத்தால் அது மிக ஆச்சரியம்...அப்படியே கிடைத்தாலும் அது மிக மிக குறைந்த தண்டனையே....நமது நாட்டில் சட்டம் ஒரு இருட்டறைதான் ...
Tuesday, December 29, 2009
இந்த வார ஹிட்டு..ஷொட்டு...குட்டு...
இனிமே வாரா வாரம் , நம்ம குமுதம் ஞாநி மாதிரி ஹிட்டு..ஷொட்டு...குட்டு... ப்ளாக் போடலாம் என்று பார்க்கிறேன்..ஐடியா என்னவோ காப்பி தான் ஆனா மேட்டர் வேறயா இருக்கும்...
சரி, இந்த வார ஹிட்டு, ஷொட்டு, குட்டு பார்க்கலாமா?
ஹிட்டு: பென்னாகரம் இடைத்தேர்தலை தள்ளி வச்சு தேர்தல் கமிஷன் அறிவித்திருக்கு..ரொம்ப ஆர்வமா தேர்தலை எதிர்பார்த்துட்டு இருந்த மக்கள்
தவிப்பில் ஆழ்ந்து இருக்கிறார்கள்.எல்லா இலவசமும் போச்சே...
ஷொட்டு: பாராட்டு விழாக்களுக்கும், சம்பிரதாய விழாக்களுக்கும் நேரத்தை செலவளியாமல் ஆக்கபூர்வமான விசயங்களுக்கு நேரத்தை ஒதுக்கும் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு இந்த வார ஷொட்டு..
குட்டு:>ஆந்திர ஆளுநராகவும் , பழுத்த பழமாகவும் இருந்து கொண்டு காம லீலைகள் புரிந்த என்.டி.திவாரி க்கு இந்த வார குட்ட்ட்டட்ட்டு ...
சரி, இந்த வார ஹிட்டு, ஷொட்டு, குட்டு பார்க்கலாமா?
ஹிட்டு: பென்னாகரம் இடைத்தேர்தலை தள்ளி வச்சு தேர்தல் கமிஷன் அறிவித்திருக்கு..ரொம்ப ஆர்வமா தேர்தலை எதிர்பார்த்துட்டு இருந்த மக்கள்
தவிப்பில் ஆழ்ந்து இருக்கிறார்கள்.எல்லா இலவசமும் போச்சே...
ஷொட்டு: பாராட்டு விழாக்களுக்கும், சம்பிரதாய விழாக்களுக்கும் நேரத்தை செலவளியாமல் ஆக்கபூர்வமான விசயங்களுக்கு நேரத்தை ஒதுக்கும் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு இந்த வார ஷொட்டு..
குட்டு:>ஆந்திர ஆளுநராகவும் , பழுத்த பழமாகவும் இருந்து கொண்டு காம லீலைகள் புரிந்த என்.டி.திவாரி க்கு இந்த வார குட்ட்ட்டட்ட்டு ...
Sunday, December 20, 2009
தெலுங்கானா..தெலுங்கானா.....
கொஞ்ச நாட்களாக எல்லா செய்தி தாள்களிலும், சேனல்களிலும் , வலைத்தளங்களிலும் நாம் படித்து கொண்டிருப்பது, பார்த்து கொண்டிருப்பது இந்த தெலுங்கானா சமாச்சாரம் தான் .....எப்ப இருந்தோ புகஞ்சிட்டு இருந்தது இப்ப நல்ல கொழுந்து விட்டு எரியுது....யாரெல்லாம் முன்னர் ஆதரவு கொடுத்தாங்களோ அவங்கல்லாம் இப்போ எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பிச்சு இருக்காங்க....ஹ்ம்ம் எல்லாம் அரசியல் ஆதாயத்துக்காக....
ராவ் என்னவோ நினச்சு உண்ணாவிரதம் இருக்க போக, அவரை உசுப்பேத்தி சாகும் வரைக்குமான உண்ணாவிரதமாக மாற்றி, மத்திய அரசை பயமுறுத்தி அறிவிப்பு விடற வரைக்குமாக போயாச்சு....இதைத்தான் பிள்ளையார் பிடிக்க குரங்காய் போச்சுன்னு பெரியவங்க சொல்லி வச்சாங்களோ....எந்த நேரத்துல மத்திய அரசு அறிவிச்சதோ , இப்போ அதற்கு எதிர்ப்பு அலையும் பயங்கரமா இருக்கு , மற்ற மாநிலங்களையும் பிரிக்கணும் என்கிற கோஷங்களும் அதிகரிச்சு இருக்கு....
தனி தெலுங்கானா கேட்பதிலையும் ஒரு நியாயம் இருக்கிறது....பல ஆண்டுகளாகவே எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் புறக்கணிக்க படுவதாலயே தனி தெலுங்கானா ஒன்றே ஒரே தீர்வு என அம்மக்கள் நினைக்கிறார்கள்....இது மத்திய அரசின் தவறே அன்றி அம்மக்களோடது அல்ல...
அவசரம் அவசரமாக அறிவிப்பு வெளியிடாமல் மெதுவாக ஆக வேண்டிய காரியங்களை செய்திருந்தால், இத்தகைய போராட்டங்களை சந்திக்கa வேண்டி இருந்திருக்காது....
சரி இதை விடுங்க...நம்ம தமிழ் நாட்டை பிரிப்பதற்காக எழும் கோஷங்களை பற்றி என்ன நினைக்கிறேர்கள்? தமிழ் நாட்டை பிரிப்பது நன்மை பயக்குமா அல்லது அவ்வாறு எண்ணுவதே தவறாகுமா?????
ராவ் என்னவோ நினச்சு உண்ணாவிரதம் இருக்க போக, அவரை உசுப்பேத்தி சாகும் வரைக்குமான உண்ணாவிரதமாக மாற்றி, மத்திய அரசை பயமுறுத்தி அறிவிப்பு விடற வரைக்குமாக போயாச்சு....இதைத்தான் பிள்ளையார் பிடிக்க குரங்காய் போச்சுன்னு பெரியவங்க சொல்லி வச்சாங்களோ....எந்த நேரத்துல மத்திய அரசு அறிவிச்சதோ , இப்போ அதற்கு எதிர்ப்பு அலையும் பயங்கரமா இருக்கு , மற்ற மாநிலங்களையும் பிரிக்கணும் என்கிற கோஷங்களும் அதிகரிச்சு இருக்கு....
தனி தெலுங்கானா கேட்பதிலையும் ஒரு நியாயம் இருக்கிறது....பல ஆண்டுகளாகவே எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் புறக்கணிக்க படுவதாலயே தனி தெலுங்கானா ஒன்றே ஒரே தீர்வு என அம்மக்கள் நினைக்கிறார்கள்....இது மத்திய அரசின் தவறே அன்றி அம்மக்களோடது அல்ல...
அவசரம் அவசரமாக அறிவிப்பு வெளியிடாமல் மெதுவாக ஆக வேண்டிய காரியங்களை செய்திருந்தால், இத்தகைய போராட்டங்களை சந்திக்கa வேண்டி இருந்திருக்காது....
சரி இதை விடுங்க...நம்ம தமிழ் நாட்டை பிரிப்பதற்காக எழும் கோஷங்களை பற்றி என்ன நினைக்கிறேர்கள்? தமிழ் நாட்டை பிரிப்பது நன்மை பயக்குமா அல்லது அவ்வாறு எண்ணுவதே தவறாகுமா?????
Tuesday, December 1, 2009
கையூட்டு.....முதல்ல இவங்கள பிடிங்க...
நம்ம ஊருல எல்லா துறைகள்ளையும் உள்ள ஒரே ஒற்றுமை என்ன என்று நாம ஆராய்ந்து பார்த்தோம் என்றால் அது கையூட்டாதான் இருக்கும்....அதாங்க லஞ்சம்...அது இல்லாத துறை ஏதுவுமே நம்ம இந்தியால கிடையாது....அதுவும் நம்ம தமிழகத்துல அது சேர் போட்டு உட்கார்ந்து ஆடுது......சமீபத்துல இந்தியால எந்த மாநிலத்தில் லஞ்சம் ஊழல் அதிகமா இருக்குது என்று ஒரு சர்வே எடுத்தாங்க...அதுல நாம முதல் இடத்தை பிடித்து பெருமை அடைகின்றோம்......
அது என்னவோ இந்தியன் தாத்தாவில் இருந்து நம்ம லஞ்ச ஒழிப்பு போலீஸ் வரை பொறி வைத்து பிடிப்பது நூறு , இருநூறு லஞ்சம் வாங்குபவர்களைதான்..இதுவரை ஒரு அமைச்சர் லஞ்சம் வாங்கியதாகவோ இல்லை ஒரு முதலமைச்சர் லஞ்சம் வாங்கி பிடி பட்டதாகவோ செய்தி வந்ததில்லை....லஞ்சம் வாங்கி பிடி பட்டவர்களுக்கு இங்கு கடுமையான தண்டனைகளும் இல்லை...
இரண்டு வாரங்களுக்கு முன் நான் தி.நகர் சென்று இருந்தேன்...எப்பொழுதும் பணம் செலுத்தி பார்க்கிங் ஏரியால விட்டு தான் போவேன்...சரி இந்த முறை சென்னை சில்க்ஸ் போறதால, பாலத்துக்கு கீழ உள்ள பார்க்கிங் ஏரியால விட்டு போலாம் என்று பாலத்துக்கு கீழ வண்டில வந்தேன்...ஆனா என் நேரம் கொஞ்சம் கூட இடமே இல்லை...சரி அப்படியே நேர போய் காசு கொடுத்து வண்டிய பார்க் பண்ணலாம் என்று நேர போனேன்....இடது பக்கம் பாண்டி பசாரில் இருந்து எல்லா வாகனங்களும் தி.நகர் செல்லவும், துரைசாமி பாலம் செல்லவும் அப்படித்தான் வரும்....நான் கிடைச்ச சந்து வழியாக நேர போறேன், ஒரு போக்குவரத்து துணை ஆய்வாளர் வந்து என்னை மறிச்சு ஓரமா கூட்டிட்டு போறார்...சரி, ஓட்டுனர் உரிமம் தான் கேட்க போறார் என்று போன, அது ஒரூ வழி பாதை...நீங்க வந்தது தப்பு என்கிறார்...
அது ஒரு வழி பாதை என்பதற்கு எந்த ஒரு அறிவிப்பும் இல்லை...புதிதாக வருபவர்களுக்கு ஏப்படி தெரியும்?? அதுவும் நான் வரும் வரை பார்த்துட்டு இருந்து இருக்கிறார்...என்னை தடுத்து இருக்கலாம்....ஆனால் அது அவர் எண்ணம் இல்லை....அபராதம கட்டுங்க என்றார்...எவ்வளவு சார் என்றேன்...நானுற்று ஐம்பது ....நானும் எவ்வளவோ கெஞ்சி பார்க்கறேன்...காசு வாங்காம அவர் விடுறதா இல்லை...கடைசில நூறு ரூபாய் கொடுத்த பிறகுதான் என்னை விட்டார்..
ஒரு பொறுப்புள்ள அதிகாரி என்றால் நான் தப்பான வழியில் வரும் முன் என்னை தடுத்து இருக்க வேண்டும்....அதுக்குத்தான் போலீஸ் இருக்காங்க...அதை விட்டு விட்டு காசு பிடுங்குவதை மட்டுமே வேலையாக பார்க்க கூடாது...ஒரு சிலரால் நேர்மையான மற்றவர்களை கூட தப்பாக நினைக்க தோன்றுகிறது...இந்தியாவில் லஞ்சம் வாங்குபவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும்....அதை பார்த்து லஞ்சம் வாங்க மற்றவர்கள் யோசிக்க வேண்டும்.....
லஞ்சம் இல்லாத துறை ஏதாவது இருக்கிறதா????இருந்தால் சொல்லுங்களேன்.....
அது என்னவோ இந்தியன் தாத்தாவில் இருந்து நம்ம லஞ்ச ஒழிப்பு போலீஸ் வரை பொறி வைத்து பிடிப்பது நூறு , இருநூறு லஞ்சம் வாங்குபவர்களைதான்..இதுவரை ஒரு அமைச்சர் லஞ்சம் வாங்கியதாகவோ இல்லை ஒரு முதலமைச்சர் லஞ்சம் வாங்கி பிடி பட்டதாகவோ செய்தி வந்ததில்லை....லஞ்சம் வாங்கி பிடி பட்டவர்களுக்கு இங்கு கடுமையான தண்டனைகளும் இல்லை...
இரண்டு வாரங்களுக்கு முன் நான் தி.நகர் சென்று இருந்தேன்...எப்பொழுதும் பணம் செலுத்தி பார்க்கிங் ஏரியால விட்டு தான் போவேன்...சரி இந்த முறை சென்னை சில்க்ஸ் போறதால, பாலத்துக்கு கீழ உள்ள பார்க்கிங் ஏரியால விட்டு போலாம் என்று பாலத்துக்கு கீழ வண்டில வந்தேன்...ஆனா என் நேரம் கொஞ்சம் கூட இடமே இல்லை...சரி அப்படியே நேர போய் காசு கொடுத்து வண்டிய பார்க் பண்ணலாம் என்று நேர போனேன்....இடது பக்கம் பாண்டி பசாரில் இருந்து எல்லா வாகனங்களும் தி.நகர் செல்லவும், துரைசாமி பாலம் செல்லவும் அப்படித்தான் வரும்....நான் கிடைச்ச சந்து வழியாக நேர போறேன், ஒரு போக்குவரத்து துணை ஆய்வாளர் வந்து என்னை மறிச்சு ஓரமா கூட்டிட்டு போறார்...சரி, ஓட்டுனர் உரிமம் தான் கேட்க போறார் என்று போன, அது ஒரூ வழி பாதை...நீங்க வந்தது தப்பு என்கிறார்...
அது ஒரு வழி பாதை என்பதற்கு எந்த ஒரு அறிவிப்பும் இல்லை...புதிதாக வருபவர்களுக்கு ஏப்படி தெரியும்?? அதுவும் நான் வரும் வரை பார்த்துட்டு இருந்து இருக்கிறார்...என்னை தடுத்து இருக்கலாம்....ஆனால் அது அவர் எண்ணம் இல்லை....அபராதம கட்டுங்க என்றார்...எவ்வளவு சார் என்றேன்...நானுற்று ஐம்பது ....நானும் எவ்வளவோ கெஞ்சி பார்க்கறேன்...காசு வாங்காம அவர் விடுறதா இல்லை...கடைசில நூறு ரூபாய் கொடுத்த பிறகுதான் என்னை விட்டார்..
ஒரு பொறுப்புள்ள அதிகாரி என்றால் நான் தப்பான வழியில் வரும் முன் என்னை தடுத்து இருக்க வேண்டும்....அதுக்குத்தான் போலீஸ் இருக்காங்க...அதை விட்டு விட்டு காசு பிடுங்குவதை மட்டுமே வேலையாக பார்க்க கூடாது...ஒரு சிலரால் நேர்மையான மற்றவர்களை கூட தப்பாக நினைக்க தோன்றுகிறது...இந்தியாவில் லஞ்சம் வாங்குபவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும்....அதை பார்த்து லஞ்சம் வாங்க மற்றவர்கள் யோசிக்க வேண்டும்.....
லஞ்சம் இல்லாத துறை ஏதாவது இருக்கிறதா????இருந்தால் சொல்லுங்களேன்.....
Tuesday, November 24, 2009
என் பேச்சை கேட்டால்... தமிழக காமெடி.....
"தேர்தலில் ஒரு முறை மக்கள் என் பேச்சை கேட்டால், தமிழகத்தில் நல்லாட்சி நடக்கும்' என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்...நடந்து கொண்டிருக்கும் ஆட்சி அவர் கூட்டணியில் அமைந்ததுதான் என்பது மறந்து விட்டது போலும்....இவர் மட்டுமல்ல, நமது தமிழக மக்களின் மறப்போம் மன்னிப்போம் மனது இருக்கும் வரை அனைத்து அரசியல் தலைவர்களும் இப்படித்தான் பேசுவார்கள்.....
ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சார்ந்த மக்களுக்காக கட்சி நடத்தும் அய்யா தமிழக மக்கள் நலனை பற்றி அக்கறை கொள்வதில் மிக்க மகிழ்ச்சி நமக்கு...
ஒரு விஷயத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஜாதி பெயரை சொல்லி அரசியல் செய்யும் எந்த தலைவரும் (மன்னிக்கவும், மனிதரும்) அந்த ஜாதிக்கு நன்மை செய்ததாக சரித்தரம் இல்லை... ஜாதி என்பது அவர்கள் அரசியலில் நுழைய தேவைப்படும் ஒரு விசிடிங் கார்டு ..அவ்வளவே...நுழைந்த பிறகு விசிடிங் கார்டு தேவை இல்லை...
பா.ஜா.க. மத்தியில் ஆட்சி அமைத்த போது அவர் பேச்சை கேட்டு அவருக்கு ஓட்டு போட்டு அமைச்சரவையில் பங்கு பெற அனுப்பி வைத்தோம் ...தமிழ் மக்களுக்காக , இல்லை வேணாம் அவரை சார்ந்த மக்களுக்காக என்ன செய்தார் ??காங்கிரஸ் கூட்டணியிலும் அவர் பங்கு பெற அவர் பேச்சை கேட்டு அவருக்கு ஓட்டு போட்டு அனுப்பி வைத்தோம்....அவர் மகனுக்காக போராடி மத்திய அமைச்சரவையில் இடம் வாங்கியதுதான் மிச்சம்...அவராவது ஏதாவது செய்வார் என்று பார்த்தால், அவருக்கு புது புது மருத்துவ கல்லூரி ஆரம்பிக்க அனுமதி கொடுப்பதற்கும் ,எய்ம்ஸ் மருத்துவமனையின் தலை சிறந்த மருத்துவரும் தலைவருமான வேணுகோபாலனை வீட்டிற்கு அனுப்புவதற்குமே நேரம் சரியாக இருந்தது.
இப்போது மட்டும் அவர் பேச்சை கேட்டு என்ன நடந்து விட போகிறது ????இவரை மட்டும் நான் குறை கூறவில்லை.இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகள் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கிறார்கள்...அவர்கள் புத்திசாலிகளாக இருக்கிறார்களா இல்லை நாம் முட்டாள்களாக இருக்கிறோமா என்பது புதிராகவே இருக்கிறது....இப்போதும் கூட மத்திய அமைச்சரைவையில் எப்படியாவது தன் மகனை நுழைத்து விட வேண்டும் என்று நினைக்கிறாரே தவிர, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாக தெரிய வில்லை...
ஒரு தனி மனிதனை விமர்சிக்க நான் வரவில்லை...இதுதான் எல்லா கட்சி தலைவர்களின் நிலைப்பாடும்....ஜாதி ரீதியான கட்சிகளுக்கு மக்கள் ஆதரவு அளிக்க கூடாது....
ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சார்ந்த மக்களுக்காக கட்சி நடத்தும் அய்யா தமிழக மக்கள் நலனை பற்றி அக்கறை கொள்வதில் மிக்க மகிழ்ச்சி நமக்கு...
ஒரு விஷயத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஜாதி பெயரை சொல்லி அரசியல் செய்யும் எந்த தலைவரும் (மன்னிக்கவும், மனிதரும்) அந்த ஜாதிக்கு நன்மை செய்ததாக சரித்தரம் இல்லை... ஜாதி என்பது அவர்கள் அரசியலில் நுழைய தேவைப்படும் ஒரு விசிடிங் கார்டு ..அவ்வளவே...நுழைந்த பிறகு விசிடிங் கார்டு தேவை இல்லை...
பா.ஜா.க. மத்தியில் ஆட்சி அமைத்த போது அவர் பேச்சை கேட்டு அவருக்கு ஓட்டு போட்டு அமைச்சரவையில் பங்கு பெற அனுப்பி வைத்தோம் ...தமிழ் மக்களுக்காக , இல்லை வேணாம் அவரை சார்ந்த மக்களுக்காக என்ன செய்தார் ??காங்கிரஸ் கூட்டணியிலும் அவர் பங்கு பெற அவர் பேச்சை கேட்டு அவருக்கு ஓட்டு போட்டு அனுப்பி வைத்தோம்....அவர் மகனுக்காக போராடி மத்திய அமைச்சரவையில் இடம் வாங்கியதுதான் மிச்சம்...அவராவது ஏதாவது செய்வார் என்று பார்த்தால், அவருக்கு புது புது மருத்துவ கல்லூரி ஆரம்பிக்க அனுமதி கொடுப்பதற்கும் ,எய்ம்ஸ் மருத்துவமனையின் தலை சிறந்த மருத்துவரும் தலைவருமான வேணுகோபாலனை வீட்டிற்கு அனுப்புவதற்குமே நேரம் சரியாக இருந்தது.
இப்போது மட்டும் அவர் பேச்சை கேட்டு என்ன நடந்து விட போகிறது ????இவரை மட்டும் நான் குறை கூறவில்லை.இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகள் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கிறார்கள்...அவர்கள் புத்திசாலிகளாக இருக்கிறார்களா இல்லை நாம் முட்டாள்களாக இருக்கிறோமா என்பது புதிராகவே இருக்கிறது....இப்போதும் கூட மத்திய அமைச்சரைவையில் எப்படியாவது தன் மகனை நுழைத்து விட வேண்டும் என்று நினைக்கிறாரே தவிர, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாக தெரிய வில்லை...
ஒரு தனி மனிதனை விமர்சிக்க நான் வரவில்லை...இதுதான் எல்லா கட்சி தலைவர்களின் நிலைப்பாடும்....ஜாதி ரீதியான கட்சிகளுக்கு மக்கள் ஆதரவு அளிக்க கூடாது....
Subscribe to:
Posts (Atom)